கொரோனவால் ஊரடங்கு பிறப்பித்த நிலையில் இந்தியாவின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் வீட்டிலேயே இருப்பதால் அவர்களின் வருமானமும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே மத்திய அரசு புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
சம்பள குறைப்பு:
கொரோனா எதிரொலியாக பிரதமர் உட்பட எம்.பிக்கள் அனைவருக்கும் சம்பளத்திலிருந்து 30% குறைக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. எம்.பிக்களின் தொகுதி மேம்பாட்டு நிதி அடுத்த 2 ஆண்டுகளுக்கு நிறுத்தப்படும் என்றும் இந்த 30 சதவீத குறைப்பு ஏப்ரல் 1 முதல் ஓராண்டு நீடிக்கும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
இதன் மூலம் ரூ.7,900 கோடி சேமிக்கப்படும் என்றும், அந்த பணம் நாட்டின் ஒருங்கிணைந்த நிதிக்கு செல்லும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.