தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலைக் குறைக்க ஏப்ரல் 14 முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ள நிலையில் அதையும் மீறி தேவை இல்லாத காரணங்களுக்காக வெளியில் சுற்றும் நபர்கள் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
54,817 பேர் கைது..!
தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 309 ஆக அதிகரித்து உள்ளது. நாளுக்கு நாள் வைரஸின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு கொடுத்தால் மட்டுமே வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த முடியும் என்பதே நிதர்சனமான உண்மை.
தமிழகத்தில் 144 தடை உத்தரவை மீறி தேவையின்றி வெளியில் சுற்றியதாக இதுவரை 54,817 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். மேலும் 40,903 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ள நிலையில் ரூ.17,02,444 ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டு உள்ளது. மத்திய அரசு ஊரடங்கு உத்தரவை மீறுபவர்களை கைது செய்து 2 வருடம் வரை சிறை தண்டனை பெரும் வகையில் வழக்குப்பதிவு செய்யுமாறு மாநில அரசுகளை அறிவுறுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது
Read More Latest Bank Jobs Details 2020
Read More Latest Defence Jobs Details 2020
Read More Latest Railway Jobs Details 2020
Read More Current Affairs Details 2020
Read More Latest Police Jobs Details 2020
To Follow Our Instagram | Click Here |
To Follow Our Twitter | Click Here |
To Join Whatsapp | Click Here |
To Join Telegram Channel | Click Here |
To Join Our Facebook | Click Here |