6 ஆம் வகுப்பு தமிழ் – முதல் பருவம் – பாடக்குறிப்புகள்:
தமிழ்த்தேன் | இன்பத்தமிழ்:
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக:
- ஏற்றத் தாழ்வற்ற ————-அமைய வேண்டும்.
அ. சமூகம்
ஆ. நாடு
இ. வீடு
ஈ. தெரு
- நாள் முழுவதும் வேலைசெய்து களைத்தவருக்கு ———-ஆக இருக்கும்.
அ.மகிழ்ச்சி
ஆ. கோபம்
இ.வருத்தம்
ஈ. அசதி
- நிலவு + என்று என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்—–
அ. நிலயென்று
ஆ. நிலவென்று
இ. நிலவன்று
ஈ. நிலவு என்று
- தமிழ் + எங்கள் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்—–
அ.தமிழங்கள்
ஆ. தமிழெங்கள்
இ. தமிழுங்கள்
ஈ. தமிழ் எங்கள்
- அமுதென்று என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
அ. அமுது + தென்று
ஆ. அமுது + என்று
இ. அமுது + ஒன்று
ஈ. அமு + தென்று
- செம்பயிர் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
அ. செம்மை + பயிர்
ஆ. செம் + பயிர்
இ. செமை + பயிர்
ஈ. செம்பு + பயிர்
- ————-அமுதென்று பேர்
அ. தமிழிற்கு
ஆ. தமிழுக்கு
ஈ. தமிழுக்கே
- தமிழ் நமது இளமைக்குக் காரணமான ——— போன்றது
அ. தேன்
ஆ. நெய்
இ. நெல்
ஈ. பால்
- தமிழ்மொழி, புலவர்களுக்கு ——— போன்றது
அ. அம்பு
ஆ. கேடயம்
இ.வாள்
ஈ. வேல்
- நமது சோர்வை நீக்குவதில் தமிழ் ———– போன்றது
அ. சோறு
ஆ. தேன்
இ. நீர்
ஈ. பால்
- தமிழ் எங்கள் கவிதைக்கு வைரம் போன்ற உறுதிமிக்க. ——–ஆகும்.
அ. அணிகலம்
ஆ. கவசம்
இ. வாள்
ஈ. வேல்
- ‘மணமென்று’ என்பதைப் பிரித்து எழுதுக.
அ. மணம் + என்று
ஆ. மணம் + ஒன்று
இ. மண + மென்று
ஈ. மணம் + மென்று
பொருத்துக:
1. வாழ்வுக்கு – அ. வாள்
2.உயர்வுக்கு – ஆ. ஊர்
- கவிதைக்கு- இ. வான்
விடை: ஆ, இ, அ.
- விளைவுக்கு – அ. பால்
- அறிவுக்கு – ஆ. வேல்
- இளமைக்கு – இ. நீர்
- புலவர்க்கு – ஈ. தோள்.
விடை: இ, ஈ, அ, ஆ.
III. ஒத்த ஓசையில் முடியும் (இயைபுச்) சொற்களை எடுத்து எழுதுக:
- பேர் – நேர்
- பேர் – நீர்
- பேர் – ஊர்
- பால் – வேல்
- வான் – தேன்
- தேள் – வாள்
தமிழ்க்கும்மி:
-
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. தாய் மொழியில் படித்தால் —— அடையலாம்.
அ. பன்மை
ஆ. மேன்மை
இ. பொறுமை
ஈ. சிறுமை
- தகவல் தொடர்பு முன்னேற்றத்தால் —– சுருங்கிவிட்டது.
அ. மேதினி
ஆ. நிலா
இ. வானம்
ஈ. காற்று
- செந்தமிழ் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது —–
அ. செந் + தமிழ்
ஆ. செம் + தமிழ்
இ.சென்மை + தமிழ்
ஈ. செம்மை + தமிழ்
- பொய்யகற்றும் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது —–
அ. பொய் + அகற்றும்
ஆ. பொய் + கற்றும்
இ. பொய்ய + கற்றும்
ஈ. பொய் + யகற்றும்
- பாட்டு + இருக்கும் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைப்பது —–
அ. பாட்டிருக்கும்
ஆ. பாட்டுருக்கும்
இ.பாடிருக்கும்
ஈ.பாடியிருக்கும்
- எட்டு + திசை என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைப்பது —-
அ. எட்டுத்திசை
ஆ. எட்டிதிசை
இ.எட்டுதிசை
ஈ. எட்டி இசை
- திசைகள் ——- செந்தமிழின் புகழ் பரவ வேண்டும்.
அ.இரண்டிலும்
ஆ. எட்டிலும்
இ. நான்கிலும்
ஈ.பத்திலும்
- ——- சிறந்து வாழ்வதற்கான வழிகாட்டு முறைகள் கொண்டது தமிழ்.
அ. உலகம்
ஆ. ஊர்
இ. தெரு
ஈ. நாடு
- கொட்டுங்கடி என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ——
அ. கொட்டுங்கள் + அடி
ஆ. கொட்டும் + கடி
இ. கொட்டு + உங்களடி
ஈ. கொட்டு + உங்கள் + அடி
- வழிகாட்டிருக்கும் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது——-
அ. வழிகாட்டி + இருக்கும்
ஆ. வழிகாட்டு + இருக்கும்
இ. வழி + காட்டிருக்கும்
ஈ. வழிகள் + காட்டி + இருக்கும்
- இளமை + கோதையர் என்னும் சொல்லைப் சேர்த்து எழுதக் கிடைப்பது ——–
அ. இளங்கோதையர்
ஆ. இளம் கோதையர்
இ. இளகோதையர்
ஈ. இளமைக் கோதையர்
- பாட்டு + இருக்கும் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைப்பது ——-
அ. பாட்டுவிருக்கும்
ஆ. பாட்டிலிருக்கும்
இ. பாடல் இருக்கும்
ஈ. பாட்டிருக்கும்
நயம் உணர்ந்து எழுதுக:
1. பாடல் அடிகளில் முதல் எழுத்து ஒன்றுபோல் வரும் (மோனை) சொற்களை எடுத்து எழுதுக.
எட்டுத்திசை – எட்டிடவே.
- பாடல் அடிகளில் இரண்டாம் எழுத்து ஒன்றுபோல் வரும் (எதுகை) சொற்களை எடுத்து எழுதுக.
கொட்டுங்கடி – எட்டுத்திசை.
வளர் தமிழ்:
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக:
- “தொன்மை’ என்னும் சொல்லின் பொருள் ——
அ. புதுமை
ஆ. பழமை
இ. பெருமை
ஈ. சீர்மை.
- ‘இடப்புறம்’ என்ற சொல்லைப் பிரிக்கக் கிடைக்கும் சொல் ——
அ. இடன் + புறம்
ஆ. இடது + புறம்
இ. இட + புறம்
ஈ. இடம் + புறம்
- ‘சீரிளமை’ என்ற சொல்லைப் பிரிக்கக் கிடைக்கும் சொல் ——
அ. சீர் + இளமை
ஆ. சீர்மை + இளமை
இ. சீரி + இளமை
ஈ. சீற் + இளமை
- சிலம்பு + அதிகாரம் என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ——
அ. சிலம்பதிகாரம்
ஆ. சிலப்பதிகாரம்
இ.சிலம்புதிகாரம்
ஈ.சிலபதிகாரம்
- கணினி + தமிழ் என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ——–
அ. கணினி தமிழ்
ஆ. கணினித்தமிழ்
இ. கணினிதமிழ்
ஈ. கணிணிதமிழ்
- ‘தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்’ என்று பாடியவர் ————-
அ. கண்ணதாசன்
ஆ. பாரதியார்
இ. பாரதிதாசன்
ஈ. வாணிதாசன்
- ‘மா’ என்னும் சொல்லின் பொருள் ————
அ. மாடம்
ஆ. வானம்
இ. விலங்கு
ஈ. அம்மா
- ‘சீர்மை’ என்னும் சொல்லின் பொருள் ———–
அ. தொன்மை
ஆ. புதுமை
இ. ஒழுங்குமுறை
ஈ. பழமை
- ‘வலஞ்சுழி’ என்ற சொல்லைப் பிரிக்கக் கிடைக்கும் சொல்
அ. வலன் + சுழி
ஆ. வலது + சுழி
இ. வல + சுழி
ஈ. வலம் + சுழி
- ‘யாமறிந்த மொழிகளிலே’ என்பதில் ‘யாமறிந்த’ என்னும் சொல்லைப் பிரிக்கக் கிடைக்கும் சொல் ——
அ. யா + மறிந்த
ஆ. யாம் + மறிந்த
இ. யாம் + அறிந்த
ஈ.யாம + அறிந்த
- இனிது + ஆவது என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ——
அ. இனிதாவது
ஆ. இனித்தாவது
இ. இனிதவாது
ஈ.இனிதுவாது
- மூன்று + தமிழ் என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ——
அ. மூத்தமிழ்
ஆ. முத்தமிழ்
இ. முத்துத்தமிழ்
ஈ. மூதமிழ்
- ‘என்று பிறந்தவள் என்று உணராத இயல்பினளாம் எங்கள் தாய்’ எனப் பாடியவர் –—-
அ. கண்ணதாசன்
ஆ. பாரதியார்
இ. பாரதிதாசன்
ஈ. வாணிதாசன்
- ‘மா’ என்னும் சொல்லின் பொருள் ———-
அ. இதழ்
ஆ. திகழ்
இ. துகள்
ஈ. பகல்
கோடிட்ட இடத்தை நிரப்புக:
- இலக்கியம் தோன்றிய பிறகே அதற்குரிய இலக்கண விதிகள் தோன்றியிருக்க வேண்டும்
- ‘தமிழன்’ என்னும் சொல் அப்பர் தேவாரத்தில் இடம் பெற்றுள்ளது.
- உலகில் எழுத்து வடிவம் பெறாத மொழிகள் பல உள்ளன.
- நாம் சிந்திக்கவும் சிந்தித்ததை வெளிபடுத்தவும் உதவுவது மொழி.
- தமிழில் நமக்குக் கிடைத்துள்ள மிகப் பழமையான இலக்கண நூல் தொல்காப்பியம்.
- மொழியைக் கணினியில் பயன்படுத்த வேண்டும் எனில் அது எண்களின் அடிப்படையில் வடிவமைக்கப்பட வேண்டும்.
தமிழ் எழுத்துகளின் வகை தொகை:
தமிழ் மொழியின் இலக்கண வகைகள் ஐந்து
- எழுத்து இலக்கணம்
- சொல் இலக்கணம்
- பொருள் இலக்கணம்
- யாப்பு இலக்கணம்
- அணி இலக்கணம்
எழுத்து:
ஒலி வடிவாக எழுப்பப்படுவதும் வரிவடிவாக எழுதப்படுவதும் எழுத்து எனப்படுகிறது.
Best Coaching Classes for Group 1, 2, 4 & Others!!!
உயிர் எழுத்துகள்:
உயிருக்கு முதன்மையானது காற்று. இயல்பாகக் காற்று வெளிப்படும்போது உயிர் எழுத்துகள் பிறக்கின்றன. வாயைத் திறத்தல், உதடுகளை விரித்தல், உதடுகளைக் குவித்தல் ஆகிய எளிய செயல்பாடுகளால் ‘அ’ முதல் ‘ஔ’ வரையுள்ள பன்னிரண்டு உயிர் எழுத்துகளும் பிறக்கின்றன.
மாத்திரை:
மாத்திரை என்பது இங்கு கால அளவைக் குறிக்கிறது. ஒரு மாத்திரை என்பது ஒருமுறை கண் இமைக்கவோ ஒருமுறை கைநொடிக்கவோ ஆகும் கால அளவாகும்.
- குறில் எழுத்தை ஒலிக்கும் காலஅளவு – 1 மாத்திரை
- நெடில் எழுத்தை ஒலிக்கும் காலஅளவு – 2 மாத்திரை
மெய்யெழுத்துகள்:
மெய் என்பது உடம்பு எனப் பொருள்படும். மெய் எழுத்துகளை ஒலிக்க உடல் இயக்கத்தின் பங்கு இன்றியமையாதது. க், ங், ச், ஞ், ட், ண், த், ந், ப், ம்,ய்,ர்,ல்,வ், ழ், ள், ற், ன் ஆகிய பதினெட்டு மெய்யெழுத்துக்களாகும்.
- மெல்லினம்: ங், ஞ், ண், ந், ம், ன்
- இடையினம்: ய், ர், ல், வ், ழ், ள்
- வல்லினம்: க், ச், ட், த், ப், ற்
மெய் எழுத்துகள் ஒலிக்கும் காலஅளவு – அரை மாத்திரை.
உயிர்மெய்:
- மெய் எழுத்துக்கள் பதினெட்டும் உயிர் எழுத்துகள் பன்னிரண்டும் சேர்வதால் தோன்றுபவை உயிர்மெய் எழுத்துகள்:
- மெய்யுடன் உயிர்க்குறில் சேர்ந்தால் உயிர்மெய் குறில் தோன்றுகிறது.மெய்யுடன் உயிர்நெடில் சேர்ந்தால் உயிர்மெய் நெடில் தோன்றுகிறது. ஆகவே உயிர்மெய் எழுத்துகளையும் உயிர்மெய்க் குறில், உயிர்மெய் நெடில் என இருவகைப்படுத்தலாம்.
ஆய்த எழுத்து:
- தமிழ்மொழியில் உயிர்,மெய், உயிர்மெய் எழுத்துகள் தவிர தனி எழுத்து ஒன்றும் உள்ளது. அது ஃ என்னும் ஆய்த எழுத்தாகும்.
- ஆய்த எழுத்தை ஒலிக்க ஆகும் காலஅளவு அரைமாத்திரை.
இயற்கை | சிலப்பதிகாரம்
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக:
- கழுத்தில் சூடுவது ——
அ. தார்
ஆ. கணையாழி
இ. தண்டை
ஈ. மேகலை
- கதிரவனின் மற்றொரு பெயர் ——
அ. புதன்
ஆ. ஞாயிறு
இ. சந்திரன்
ஈ. செவ்வாய்
- வெண்குடை என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது.
அ. வெண் + குடை
ஆ. வெண்மை+குடை
இ. வெம்+ குடை
ஈ. வெம்மை +குடை
- பொற்கோட்டு என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைக்கும் சொல்
அ. பொன்+கோட்டு
ஆ. பொற்+கோட்டு
இ. பொண்+கோட்டு
ஈ. பொற்கோ+இட்டு
- கொங்கு+ அலர் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்
அ. கொங்கு அலர்
ஆ. கொங் அலர்
இ. கொங்கலர்
ஈ. கொங்குலர்
- அவன்+ அளிபோல் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்
அ. அவன் அளிபோல்
ஆ. அவனளிபோல்
இ. அவன் வளிபோல்
ஈ. அவனாளி போல்
- ‘சென்னி’ என்பது ——— க் குறிக்கும் பெயர்.
அ. சாளுக்கியனை
ஆ. சேரனை
இ. சோழனை
ஈ. பாண்டியனை
- திகிரி என்பது குறிக்கும் பொருள் ——
அ. குடை
ஆ. சக்கரம்
செங்கோல்
ஈ. வாள்
- ‘நாம’ என்னும் சொல் உயர்த்தும் பொருள் —–
அ. அச்சம்
ஆ. கடல்
இ. திருமண்
ஈ. பெயர்
- ‘அங்கண்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது.
அ. அங்+கண்
ஆ. அம்+கண்
இ. அங்கு+கண்
ஈ. அங்கு+அண்
- மூன்று பாடல்களிலும் போற்றப்படும் அரசன்
அ. சாளுக்கியன்
ஆ. சேரன்
இ. சோழன்
ஈ. பாண்டியன்
12.மேல் +நின்று என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்
அ. மேநின்று
ஆ. மேன்நின்று
இ. மேனி நின்று
ஈ. மேனின்று
நயம் அறிக:
-
பாடலில் இடம் பெற்றுள்ள மோனைச் சொற்களை எழுதுக.
- திங்களைப் போற்றுதும் திங்களைப் போற்றுதும்
- கொங்கு அலர்தர்ச் சென்னி குளிர் வெண்குடை போன்று
- ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும்
- மாமழை போற்றுதும் மாழை போற்றுதும்
-
பாடலில் இடம் பெற்றுள்ள எதுகைச் சொற்களை எழுதுக.
திங்களைப் போற்றுதும் திங்களைப் போற்றுதும்.
III. பொருத்துக
அ. குடை – ஞாயிறு
ஆ. சக்கரம் – மழை
இ. அருள் – திங்கள்
விடை:
அ. குடை – திங்கள்
ஆ. சக்கரம் – ஞாயிறு
இ. அருள் – மழை
காணிநிலம்
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
- கிணறு என்பதைக் குறிக்கும் சொல்
அ. ஏரி
ஆ. கேணி
இ. குளம்
ஈ. ஆறு
- சித்தம் என்பதன் பொருள்
அ. உள்ளம்
ஆ. மணம்
இ. குணம்
ஈ. வனம்
3.மாடங்கள் என்பதன் பொருள் – மாளிகையின்
அ. அடுக்குகள்
ஆ. கூரை
இ. சாளரம்
ஈ. வாயில்
4.நன்மாடங்கள் என்னும் சொல்லைப் பிரிக்கக் கிடைக்கும் சொல்
அ. நன்+மாடங்கள்
ஆ. நற்+மாடங்கள்
இ. நன்மை + மாடங்கள்
ஈ. நல்+மாடங்கள்
- நிலத்திடையே என்னும் சொல்லைப் பிரிக்கக் கிடைக்கும் சொல்
அ. நிலம்+இடையே
ஆ. நிலத்தின்+இடையே
இ. நிலத்து+இடையே
ஈ. நிலத்+திடையே
- முத்து+சுடர் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்
அ. முத்துசுடர்
ஆ. முச்சுடர்
இ. முத்துடர்
ஈ. முத்துச்சுடர்
- நிலா+ஒளி என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்.
அ, நிலாஒளி
ஆ. நிலஒளி
இ. நிலா ஒளியை
ஈ. மாளிகையை
- இளம் தென்றல் என்பதைப் பிரிக்கக் கிடைக்கும் சொல் —————
அ. இள + தென்றல்
ஆ.இளந்+தென்றல்
இ. இளமை+ தென்றல்
ஈ. இளமெய்+தென்றல்
பொருத்துக:
அ.
- முத்துச்சுடர் போல – மாடங்கள்
- தூய நிலத்தில் – தென்றல்
- சித்தம் மிகிழ்ந்திட – நிலாஒளி
விடை:
- முத்துச் சுடர் போல – நிலாஒளி
- தூய நிலத்தில் – மாடங்கள்
- சித்தம் மகிழ்ந்திட – தென்றல்
ஆ
- தூண் – முத்துச்சுடர்
2.மாடம் – அழகு
- நிலா வொளி – தூயநிறம்
விடை:
- தூண் – அழகு
- மாடம் – தூய நிறம்.
- நிலாஒளி – முத்துச்சுடர்.
III. நயம் அறிக
- காணிநிலம் பாடலில் இடம் பெற்றுள்ள மோனைச் சொற்களை எடுத்து எழுதுக.
தூணில், துய்ய, காணி, கட்டி
- காணி நிலம் பாடலில் இடம் பெற்றுள்ள எதுகைச் சொற்களை எடுத்து எழுதுக.
அ. காணிநிலம் – தூணில் & காணிநிலத்திடையே – கேணி ஆருகினிலே
ஆ. பத்துப் பன்னிரண்டு – முத்துச்சுடர் & கத்தும் –சித்தம்.
உரைநடை உலகம் | சிறகின் ஓசை
உரிய சொல்லைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
- தட்ப வெப்பம் என்னும், சொல்லைப் பிரிக்கக் கிடைக்கும் சொல்.
அ. தட்பம்+வெப்பம்
ஆ. தட்ப+வெப்பம்
இ. தட்+வெப்பம்
ஈ. தட்பு+வெப்பம்
- வேதியுரங்கள் என்னும் சொல்லைப் பிரிக்கக் கிடைக்கும் சொல்.
அ. வேதி+யுரங்கள்
ஆ. வேதி+உரங்கள்
இ. வேத்+உரங்கள்
ஈ. வேதியு+ரங்கள்
- தரை+இறங்கும் என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்
அ. தரையிரங்கும்
ஆ. தரைஇறங்கும்
இ. தரையுறங்கும்
ஈ. தரையிறங்கும்
- வழி+தடம் என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்
அ. வழிதடம்
ஆ. வழித்தடம்
இ. வழிதிடம்
ஈ. வழித்திடம்
- சிட்டுக் குருவி வாழ முடியாத பகுதி
அ. துருவப்பகுதி
ஆ. இமயமலை
இ. இந்தியா
ஈ. தமிழ்நாடு
- பெருங்கடல் என்பதைப் பிரிக்கக் கிடைக்கும் சொல்
அ. பெரு+கடல்
ஆ. பெருங்+கடல்
இ. பெருமை +கடல்
ஈ. பெரிய+கடல்
- செங்கால் என்பதைப் பிரிக்கக் கிடைக்கும் சொல்
அ. செங்+கடல்
ஆ. செம்+கால்
இ. செங்கு+கால்
ஈ. செம்மை+கடல்.
- வடக்கு + திசை என்பதைச் சேர்த்து எழுதக்கிடைக்கும் சொல்
அ. வடக்குதிசை
ஆ. வடதிசை
இ. வடசை
ஈ. வடக்திசை
- நாராய் நாராய் எனத்தொடங்கும் பாடலை எழுதியவர்.
அ. கபிலர்
ஆ. சத்திமுத்தப் புலவர்
இ. படிக்காசுப்புலவர்
ஈ. ஒளவையார்.
- உலகிலேயே நெடுந் தொலைவு பயணம் செய்யும் பறவையினம் —–
அ. அண்டார்சிக் ஆலா
ஆ. ஆர்டிக் ஆலா
இ. ஆர்னித்தாலஜி
ஈ. சைக்காலஜி
- உலகச் சிட்டுக் குருவிகள் நாள்
அ. மார்ச் 10
ஆ. மார்ச் 20
இ. ஏப்ரல் 10
ஈ. ஏப்ரல் 20.
கோடிட்ட இடங்களை நிரப்புக.
- நீர்வாழ் பறவைகளே பெரும்பாலும் வலசை போகின்றன.
- ஆண் குருவியின் தொண்டைப் பகுதி கறுப்பு நிறத்தில் இருக்கும்.
- சிட்டுக்குருவி பதினான்கு நாள்கள் அடைகாக்கும்.
- டாக்டர் சலீம் அலியின் தன்வரலாற்று நூலுக்குப் பெயர் சிட்டுக் குருவியின் வீழ்ச்சி.
முதலெழுத்தும் சார்பெழுத்தும்
எழுத்துகள் இரண்டு வகைப்படும்
- முதல் எழுத்து
- சார்பு எழுத்து
முதல் எழுத்து:
உயிர் எழுத்துகள் பன்னிரண்டு. மெய்யெழுத்துகள் பதினெட்டு ஆகிய முப்பது எழுத்துகளும் முதல் எழுத்துகள் ஆகும். பிற எழுத்துகள் தோன்றுவதற்கும் இயங்குவதற்கும் முதற்காரணமாக இவை இருக்கின்றன. எனவே இவற்றை முதல் எழுத்துகள் என்பர்..
சார்பு எழுத்துகள்:
முதல் எழுத்துகளைச் சார்ந்து வரும் எழுத்துகள் சார்பெழுத்துகள். இவை பத்து வகைப்படும்.
- உயிர்மெய்
- ஆய்தம்
- உயிரளபெடை
- ஒற்றளபெடை
- குற்றியலிகரம்
- குற்றியலுகரம்
- ஐகாரக் குறுக்கம்
- மகரக்குறுக்கம்
- ஔகாரக் குறுக்கம்
- ஆய்தக்குறுக்கம்
உயிர்மெய்:
- மெய் எழுத்துகளும் உயிர் எழுத்துகளும் ஒன்றுடன் ஒன்று சேர்வதால் உயிர்மெய் எழுத்துகள் தோன்றுகின்றன.
- உயிர்மெய் எழுத்தின் ஒலிவடிவம் மெய்யும் உயிரும் சேர்ந்ததாக இருக்கும்.
- வரிவடிவம் மெய்யெழுத்தை ஒத்திருக்கும். ஒலிக்கும் கால அளவு உயிர் எழுத்தை ஒத்திருக்கும்.
- முதல் எழுத்துகளைச் சார்ந்து வருவதால் இவை சார்பெழுத்து வகையுள் அடங்கும்.
ஆய்தம்:
- மூன்று புள்ளிகளை உடைய தனித்த வடிவம் பெற்றது.
- முப்புள்ளி, முப்பாற்புள்ளி, தனிநிலை என்ற வேறு பெயர்களும் இதற்கு உண்டு.
- நுட்பமான ஒலிப்பு முறையை உடையது.
- தனக்குமுன் ஒரு குறில் எழுத்தையும் தனக்குப்பின் ஒரு வல்லின உயிர்மெய் எழுத்தையும் பெற்றுச் சொல்லின் இடையில் மட்டுமேவரும்.
- தனித்து இயங்காது.
- முதல் எழுத்துகளாகிய உயிரையும், மெய்யையும் சார்ந்து இயங்குவதால் ஆய்த எழுத்து சார்பெழுத்து ஆகும்.
திருக்குறள்:
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
- —– இல்லையென்றால் உயிர்களைப் பசி துன்புறுத்தும்.
அ. பூமி
ஆ. காற்று
இ.நெருப்பு
ஈ. மழை
- அன்பு அள்ளவர்கள் தம் —- பிறர்க்கே என்பர்.
அ. பணமும்
ஆ. கல்வியும்
இ. உடம்பும்
ஈ.உயிரும்.
- மக்களுக்கு மகிழ்ச்சி தருவது.
அ. ஊக்கமின்மை
ஆ. அறிவுடைய மக்கட்பேறு
இ. வன்சொல்
ஈ. சிறிய சொல்
- ஒருவர்க்குச் சிறந்த அணி——
அ. மாலை
ஆ. காதணி
இ. இன்சொல்